மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்

Trincomalee Athaullah A L M Sri Lanka Politician
By Rakshana MA Mar 09, 2025 07:01 AM GMT

திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேசத்தில் நேற்று(08)மாலை தேசிய காங்கிஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டுள்ளார்.

இதில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகள்! அரசாங்கத்திற்கு எழுந்துள்ள சவால்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகள்! அரசாங்கத்திற்கு எழுந்துள்ள சவால்

மக்கள் சந்திப்பு

மேலும், பொதுமக்களின் தேவைகளும் கலந்தாலோசிக்கப்பட்டு, அவற்றினை மிக விரைவாக நிவர்த்தி செய்வது தொடர்பிலும், மூதூர் பிரதேசங்களுக்கு பல அபிவிருத்திக்கான வேலை திட்டங்கள் முன்னெடுப்பது தொடர்பிலும், பல வேலை திட்டங்கள் செய்திருப்பதாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளார்.

மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் | Former Mp Athaullah Holds Public Meeting

இந்நிலையில், மீண்டும் மக்கள் சந்திப்பை மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மக்கள் சந்திப்பில், கட்சியின் உப தலைவர் ஏ.உதுமான் லெப்பை, தேசிய அமைப்பாளர் எம்.வை.எம்.சியா மற்றும் மூதூர் மத்திய குழு தலைவர் ஏ.எஸ்.எம்.நிஹார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைகள்!

ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைகள்!

மாளிகைக்காட்டில் இப்தார் நிகழ்வு முன்னெடுப்பு

மாளிகைக்காட்டில் இப்தார் நிகழ்வு முன்னெடுப்பு

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery