யாழ் விபத்தில் விடுதலைப் புலிகள் முன்னாள் போராளி உயிரிழப்பு!

By Mubarak Oct 06, 2024 10:48 AM GMT
Mubarak

Mubarak

 யாழில் (Jaffna) விபத்தின் போது காயமடைந்த முன்னாள் போராளி சிகிச்சை பலன் இன்றி இன்று (06) உயிரிழந்துள்ளார்.

மாமுனை பகுதியை சேர்ந்த கடற்புலி முன்னாள் போராளியும் மற்றும் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான பணியை மேற்கொண்டு வந்தவருமான நடேசு பரமேஸ்வரன் (Natesu Parameswaran) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமிழ் மொழித் தினப் போட்டிகளில் கல்முனை வலயத்திற்கு இரண்டு முதலிடம்!

தமிழ் மொழித் தினப் போட்டிகளில் கல்முனை வலயத்திற்கு இரண்டு முதலிடம்!

முன்னாள் போராளி

மாமுனையிலிருந்து தாளையடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று கடற்கரை வீதியில் இருந்து உள்ளக வீதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று வடக்கு நாற்சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றது.

யாழ் விபத்தில் விடுதலைப் புலிகள் முன்னாள் போராளி உயிரிழப்பு! | Former Ltte Fighter Killed In Jaffna Accident

இந்த விபத்தானது கடந்த நான்காம் திகதி இடம்பெற்ற நிலையில், அவர் யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

குறித்த நபர் இன்று (06) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், பிரேத பரிசோதனையின் பின் அவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், விபத்து குறித்து மருதங்கேணி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேங்காய் எண்ணெய் தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

தேங்காய் எண்ணெய் தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW