குடாவெல்லையில் திடீரென தீப்பிடித்து எரிந்த படகுகள்

Sri Lanka Southern Province Ship
By Rakshana MA Oct 21, 2024 11:31 AM GMT
Rakshana MA

Rakshana MA

குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு படகுகள் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று (21) காலை 7.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

தீப்பற்றியமைக்கான காரணம்

திடீரென தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குடாவெல்லையில் திடீரென தீப்பிடித்து எரிந்த படகுகள் | Fishing Boats Caught Fire In Kudawella

தீப்பிடித்து பற்றியெரிந்த மீன்பிடிப்படகின் உரிமையாளர் குடாவெல்ல பிரதேசத்தை சேர்ந்த ஜயந்த ஜயவீர என விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த தீ விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தேர்தல் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்ட உத்தரவுகள்

தேர்தல் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்ட உத்தரவுகள்

முன்னாள் அமைச்சரது உறவினரின் இல்லத்தில் பெறுமதிமிக்க வாகனங்கள் மீட்பு

முன்னாள் அமைச்சரது உறவினரின் இல்லத்தில் பெறுமதிமிக்க வாகனங்கள் மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW