மஹா ஓயாவில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டம்
அம்பாறையில் மொத்தமாக 600 மெகாவாற் திறன் கொண்ட மின் சேமிப்பு திட்டம் ஒன்று இலங்கை மின்சார சபையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது மஹா ஓயாவிலிருந்து பிரித்து எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
சூரிய மற்றும் காற்றாலையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து, தேவை அதிகரிக்கும் போது அதை மீண்டும் மின்கட்டமைப்புக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய அளவிலான எரிசக்தி சேமிப்பு
மேலும், இந்த திட்டம் ஒரு பெரிய அளவிலான எரிசக்தி சேமிப்பு அமைப்பாகும்.
இது அரநாயக்க மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளில் அமைந்துள்ள இரண்டு நீர்த்தேக்கங்களை 2.5 கிலோ மீற்றர் சுரங்கப்பாதையுடன் இணைப்பதன் மூலம் செயல்படும்.
பிரகாசமான பசுமை எரிசக்தி எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்துக்கு ஆதரவளிக்குமாறு இலங்கை மின்சார சபை பங்குதாரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |