கொழும்பில் முகநூல் விருந்து: பல மாணவர்கள் கைது

Colombo Sri Lanka Police Investigation Crime
By Laksi Sep 30, 2024 01:02 PM GMT
Laksi

Laksi

கொழும்பில் இடம்பெற்ற முகநூல் விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட 18 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுகவெல கெசல்வத்தையில் உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்தில் நேற்று (29) மாலை நடைபெற்ற களியாட்ட நிகழ்வின் போதே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

றாகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊழல் மோசடிகளை ஆராய ஜனாதிபதி தலைமையில் விசேட விசாரணைப் பிரிவு

ஊழல் மோசடிகளை ஆராய ஜனாதிபதி தலைமையில் விசேட விசாரணைப் பிரிவு

மாணவர்கள் கைது

இதன்போது கொட்டாஞ்சேனை, புளுமண்டல், தெமட்டகொடை, வெல்லம்பிட்டி மற்றும் கொலன்னாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 15 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் முகநூல் விருந்து: பல மாணவர்கள் கைது | Facebook Party16 Students Arrested

கைது செய்யப்பட்டவர்களில் 16 மாணவர்களும் 02 மாணவிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர்களை றாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை றாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மருதமுனை தேர்தல் குழுவுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விசேட சந்திப்பு

மருதமுனை தேர்தல் குழுவுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விசேட சந்திப்பு

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW