சஜித் பிரேமதாசவுக்கு மக்களின் பேராதரவு கிடைத்துள்ளது: ரவூப் ஹக்கீம்

Rauf Hakeem Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 14, 2024 10:22 AM GMT
Laksi

Laksi

எல்லா இடங்களிலும் சஜித் பிரேமதாசவுக்கு மக்களின் பேராதரவு கிடைத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சஜித் பிரேமதாசவை பலரும் பலவிதமாக விமர்சனம் செய்யலாம். முஸ்லீம் சமுதாயம் மீது அவரது நடத்தை சிறப்பாகவுள்ளது. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஜித்தை ஆதரித்து நேற்று (13) இரவு மூதூரில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் பீடி இலை பொதிகளுடன் இளைஞன் கைது

புத்தளத்தில் பீடி இலை பொதிகளுடன் இளைஞன் கைது

முஸ்லீம் மக்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில், உச்ச நீதிமன்றத்தில் , நானும் சஜித்துக்கு ஆதரவு வழங்குகின்ற நண்பர்களான சுமந்திரன்,சம்பிக்க ரணவக்க ஆகியோர் இணைந்து சட்டம் ஒழுங்கு அமைச்சர்,குடிவரவு குடியகழ்வு திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக மிகப்பெரிய ஊழல் மோசடி தொடர்பாக , மிகப் பெரிய மனித உரிமை தொடர்பான வழக்கொன்றை செய்திருக்கின்றோம்.

சஜித் பிரேமதாசவுக்கு மக்களின் பேராதரவு கிடைத்துள்ளது: ரவூப் ஹக்கீம் | Election Meeting In Mudur In Support Of Sajith

முஸ்லீம் மக்கள் பலஸ்தீன மக்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கவலையுற்றிருந்த போது ரணில் விக்ரமசிங்க நற்புப் பாராட்டினார்.

எமது நாடு பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்ட போது எமது அயல் நாடான இந்தியா கைகொடுத்து உதவியது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

சஜித் வெற்றி 

கடந்த காலத்தில் ஆட்சியை கைப்பற்றுவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலை காரணம் காட்டி பல்வேறு அராஜகங்களை புரிந்தார்கள்.பல்வேறு துவேசங்களை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

சஜித் பிரேமதாசவுக்கு மக்களின் பேராதரவு கிடைத்துள்ளது: ரவூப் ஹக்கீம் | Election Meeting In Mudur In Support Of Sajith

பெரும்பாண்மை மக்களின் பேராதரவு இருந்த அந்த நேரத்திலும் கோட்டாபயவினால் 52 வீதமான வாக்குகளே பெற முடிந்தது.

இந்த முறை கோட்டாபயவுக்கு அடித்த அலைபோன்று இப்போது இல்லை. சஜித் பிரேமதாசவே இம்முறை வெற்றி பெறுவார் எனவும் தெரிவித்தார்.

நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டவர் ரணிலே: முசம்மில் தெரிவிப்பு

நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டவர் ரணிலே: முசம்மில் தெரிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW