களுவாஞ்சிகுடி நகரில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரசார நடவடிக்கை

Easwari Rao Batticaloa Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 17, 2024 11:48 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பில் தமிழ் பொது வேட்பாளர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரசார நடவடிக்கையானது களுவாஞ்சிகுடி நகரில் இன்று (17) நடைபெற்றுள்ளது.

இதன்போது களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள், கடைத்தொகுதிகள், பேருந்து நிலையம், பொதுச்சந்தைத் தொகுதி உள்ளிட்ட பல இடங்களிலும் இத்துண்டுபிரசுர பிரசாரப்பணி இடம்பெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியில் நாளை அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் நாளை அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு

பிரசார நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, முன்னாள் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நா. நகுலேஸ் மற்றும் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்து பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

களுவாஞ்சிகுடி நகரில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரசார நடவடிக்கை | Election Campaign For Tamil Candidate In East

 இதேவேளை, இன்று (17) பிற்பகல் 3 மணிக்கு கல்லடியில் உள்ள மீன் பூங்காவிற்கு அருகிலுள்ள மைதானத்தில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியேந்திரனின் மாபெரும் பிரசார கூட்டம் இடம்பெறவுள்ளது.

யுக்திய சுற்றிவளைப்பில் 761 பேர் கைது

யுக்திய சுற்றிவளைப்பில் 761 பேர் கைது

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW