பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பாகிஸ்தானில் இன்று (29) அதிகாலை 3.54 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்ததன்படி, இந்த நில அதிர்வு மெக்னிடியூட் அளவுகோலில் 5.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், நில அதிர்வு ஏற்பட்டதும் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இதுவரை உயிரிழப்புகள் அல்லது மரண சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
An earthquake with a magnitude of 5.2 on the Richter Scale hit Pakistan at 3:54 am IST: National Centre for Seismology. The epicenter of the earthquake was located 149 km west of the city of Multan.
— Lokmat Times Nagpur (@LokmatTimes_ngp) June 29, 2025
#earthquake #Pakistan #quake #tremors pic.twitter.com/SzVO9GOr8t
நில அதிர்வால் மக்கள் இடையே குறுகிய நேரத்திற்குள் பெரும் அச்சம் ஏற்பட்டது. அதிகாரிகள் தொடர்ந்தும் நிலைமையை கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |