பொதுத் தேர்தலில் மக்கள் எம்மோடு சேர்ந்து அரசியல் பலத்தை வழங்க வேண்டும்: டக்ளஸ் அழைப்பு

Batticaloa Douglas Devananda Sri Lanka General Election 2024
By Laksi Oct 22, 2024 11:12 AM GMT
Laksi

Laksi

தேர்தலில் மக்கள் எமது வழிமுறைகளை ஏற்று அரசியல் பலத்தை வழங்க அணி திரளவேண்டும் என டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே அவர் மக்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர் அரசியல் புலத்தில் மாற்றம் வேண்டும் என தமிழ் மக்கள் உணர்ந்து விட்டார்கள். அதை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சாத்தியமாக்கவும் எண்ணுகின்றார்கள்.

டொலர் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலர் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

அரசியல் மாற்றம்

மக்களின் இந்த அரசியல் தெளிவும் மன மாற்றமும் வரவேற்கத்தக்கது. இந்நிலையில் தற்போதும் ஒரு அரசியல் மாற்றத்துக்கான சூழ்நிலை வந்துள்ளது.

பொதுத் தேர்தலில் மக்கள் எம்மோடு சேர்ந்து அரசியல் பலத்தை வழங்க வேண்டும்: டக்ளஸ் அழைப்பு | Douglas Campaign In Batti For Parliament Election

குறிப்பாக அந்த மாற்றம் போலித் தேசிய தரப்பினரிடமிருந்து விடுபட்டு தடுமாறாத கொள்கையையும் சிறந்த தலைமைத்துவத்தையும் கொண்டவர்கள் பக்கமாக வீசுவதே தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்கும்.

இதேவேளை தமிழர்களின் அரசியலில் மிக முக்கியமான தருணமாக இது உள்ளது என்றார்.

ஈஸ்டர் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது: அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ

ஈஸ்டர் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது: அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ

திருகோணமலையில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு தெளிவூட்டல் நிகழ்ச்சி

திருகோணமலையில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு தெளிவூட்டல் நிகழ்ச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW