அம்பாறை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

Ampara Sri Lanka Sri Lanka Fisherman
By Rakshana MA May 28, 2025 04:59 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்றைய தினம் (27) அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த கூட்டமானது, அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம ஏற்பாட்டில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது

எதிர்வரும் நாட்களில் நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்

எதிர்வரும் நாட்களில் நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்

ஆழ்கடல் திருட்டு 

இந்த நிகழ்வின் போது திகாமடுல்ல மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவினால், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குரிய பல நாள் மீன்பிடிப் படகுகளில் மீன் பிடிக்கப்படுவதால், அக்கடற்றொழிலாளர்களின் மீன் அறுவடையை ஆழ்கடலில் திருடப்படுகின்றது.

அம்பாறை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்கள் | District Coordination Committee Meeting

இந்த திருட்டினை நிறுத்த விரைவில் நடவடிக்கை எடுக்க பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த பிரேரணை ஆராயப்பட்டு, அது தொடர்பாக அறிக்கை ஒன்றினை உடனடியாக ஜனாதிபதிக்கும் மீன்பிடி அமைச்சிக்கும் அனுப்ப வேண்டும் எனவும் அதுபோன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி மீன் கொள்ளை தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானமும்  பெறப்பட்டது.

அத்துடன் கடற்றொழிலாளர்களின் மற்றுமொரு பிரச்சனையான, கடல் அரிப்பு தொடர்பாக ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டறிவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா ஸ்தலத்திற்கு விஜயம் செய்ததோடு கல்முனை பிரதேசத்தில் உள்ள கடலரிப்புக்குள்ளான பிரதேசங்களில் உடனடியாக கடல் அரிப்பைத் தடுப்பதற்கான கற் தடைகளை ஏற்படுத்துவதற்காக வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதிரடியான சுற்றிவளைப்பில் சிக்கிய 477 பேர்! வெளியான தகவல்

அதிரடியான சுற்றிவளைப்பில் சிக்கிய 477 பேர்! வெளியான தகவல்

சிறப்பு கலந்துரையாடல் 

மேலும், இந்நிகழ்வில் கரையோரப் பாதுகாப்பு திணைக்களப் பொறியியலாளர் துளசிதாசன் மற்றும் கரையோரப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டதோடு கடற்றொழிலாளர்களும் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினருடன் பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

அம்பாறை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்கள் | District Coordination Committee Meeting  

இதில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிசாம் காரியப்பர், மு.கா. பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் அஷ்ரப் தாஹிர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, மஞ்சுல சுகத் ரத்நாயக, பிரியந்த விஜயரத்ன, ஏ.எம்.எம்.ரத்வத்த மற்றும் திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.  

உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

நபர சபை ஊழியர்களின் போராட்டம் : குப்பையாக மாறியுள்ள கிண்ணியா பிரதேசம்

நபர சபை ஊழியர்களின் போராட்டம் : குப்பையாக மாறியுள்ள கிண்ணியா பிரதேசம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery