நபர சபை ஊழியர்களின் போராட்டம் : குப்பையாக மாறியுள்ள கிண்ணியா பிரதேசம்
கிண்ணியா நகர சபை ஊழியர்கள் தங்களுடைய மே மாத சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி, இன்று (27) சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் சுற்றறிக்கைக்கு இணங்க, மே மாதம் 23 திகதி சம்பளம் வழங்கப்பட வேண்டிய நாளாகும். ஆனால் இன்றைய தினம் வரை சம்பளம் வழங்கப்படவில்லை என ஊழியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
போராட்டத்தின் காரணம்
இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், இறுதியாக ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிதான் சம்பளம் பெற்றோம்.
இன்றுடன் 45 நாட்கள் சென்று விட்டன. இந்த நிலையில், எங்களுடைய வாழ்க்கைச் செலவுகளை எப்படி நாங்கள் சமாளிப்பது? என கேள்வி எழுப்பினர்.
ஒரு ஊழியர்குரிய 80 வீதமான சம்பளத்தைதான் திறைசேரி ஒதுக்கி இருந்தது என்றும் மீதி 20 வீதமானதை உள்ளூராட்சி மன்றங்கள் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில், போதுமான வருமானம் கிண்ணியா நகர சபைக்கு இல்லாததன் காரணமாக, சம்பளம் கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக நகர சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஊழியர்களின் இப்போராட்டத்தின் காரணமாக சேவை நாடி வந்த பொதுமக்களுக்கு தகுந்த சேவை வழங்கப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, இந்த போராட்டத்தின் விளைவால் வீதிகள் சுத்தம் செய்யப்படாமல் கழிவுகள் நிறைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





