நாட்டில் சில பகுதிகளில் இடியுடன் கடும் மழை பெய்யும் சாத்தியம்

Sri Lanka Climate Change Weather
By Rakshana MA Jun 12, 2025 03:12 AM GMT
Rakshana MA

Rakshana MA

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'எழுதப்படாத வசனங்கள்' குறும்பட திரையிடல் நிகழ்வு

'எழுதப்படாத வசனங்கள்' குறும்பட திரையிடல் நிகழ்வு

விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அத்தோடு,வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நாட்டில் சில பகுதிகளில் இடியுடன் கடும் மழை பெய்யும் சாத்தியம் | Department Of Meteorology Srilanka

மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

இஸ்லாத்தின் தூண்கள்

இஸ்லாத்தின் தூண்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW