பாடசாலையில் மாணவர்களிடமிருந்து அறவிடப்படும் பணம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

Sri Lankan Peoples Money Harini Amarasuriya Sri Lankan Schools
By Rakshana MA Mar 08, 2025 07:35 AM GMT
Rakshana MA

Rakshana MA

பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூலிப்பது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்படும் போது அதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுவின் முதல் அமர்வில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மற்ற வைத்திய சாலைகளில் காணப்படும் unit கூட கிண்ணியா வைத்தியசாலையில் இல்லை!

மற்ற வைத்திய சாலைகளில் காணப்படும் unit கூட கிண்ணியா வைத்தியசாலையில் இல்லை!

பொது மக்களுக்கான விழிப்புணர்வு

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்விக் கொள்கைகளை முறையாக செயல்படுத்தாததாலும், அரசியல் தலையீடுகளாலும் பல நெருக்கடிகள் எழுந்துள்ளது.

பாடசாலையில் மாணவர்களிடமிருந்து அறவிடப்படும் பணம் தொடர்பில் வெளியான அறிவித்தல் | Crime To Collect Money From Students In Schools

2026 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள கல்வி சீர்திருத்தத்தில் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல், மனித வளங்களை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டை நடத்துதல் ஆகியவை அடங்கும்.

இதேவேளை, பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவினால் கடந்த ஆண்டு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சாதாரண தர பரீட்சை தொடர்பில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் தடை

சாதாரண தர பரீட்சை தொடர்பில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் தடை

மாகாணமட்ட ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவான மாவடிப்பள்ளி மாணவர்கள்!

மாகாணமட்ட ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவான மாவடிப்பள்ளி மாணவர்கள்!

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW