உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகரித்துள்ள முறைப்பாடுகள்

Sri Lanka Police Sri Lankan Peoples Election Local government Election
By Rakshana MA Apr 14, 2025 04:04 AM GMT

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை 154 குற்றவியல் முறைப்பாடுகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நேற்று 5 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் ஒரு முறைப்பாடும் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இறந்த 6 மகன்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்திய தந்தை!

இறந்த 6 மகன்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்திய தந்தை!

அதிகரிக்கும் முறைப்பாடுகள் 

அத்துடன் மார்ச் 3 ஆம் திகதி முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் 154 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகரித்துள்ள முறைப்பாடுகள் | Complaints Rise About Local Election

இந்த சம்பவங்கள் தொடர்பாக 14 வேட்பாளர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் 46 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மேலும் 11 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத அரசு நிறுவனங்கள் குறித்த முடிவு

குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத அரசு நிறுவனங்கள் குறித்த முடிவு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW