உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகரித்துள்ள முறைப்பாடுகள்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை 154 குற்றவியல் முறைப்பாடுகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நேற்று 5 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் ஒரு முறைப்பாடும் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அதிகரிக்கும் முறைப்பாடுகள்
அத்துடன் மார்ச் 3 ஆம் திகதி முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் 154 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக 14 வேட்பாளர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் 46 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மேலும் 11 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |