சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய முயற்சி
கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுற்றுச்சூழலை அழகுபடுத்தும் செயற்பாடு இன்று(07) இடம்பெற்றுள்ளது.
இந்த அழகுபடுத்தும் செயற்றிட்டமானது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே.மதன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை
மேலும், இந்த நிகழ்வில் அலுவலக வளாகத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை நிலையை மேம்படுத்தலுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பசுமை நிறைந்த சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்குடன் பயன் தரும் தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இந்த செயற்றிட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற தொடர்பராமரிப்பு முறைகள் குறித்து பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த திட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் புதிய ஓர் ஆரம்பம் மற்றும் இது சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


