கடற்கரை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!
புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தென்மேற்கிலிருந்து காற்று வீசும், காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ.வரை இருக்கும் என தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் காற்றின் வேகம்
சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ. வரையிலும்,
அத்தோடு, சிலாபம் முதல் கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையிலும், காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு வழியாக வாகரை வரையிலும் உள்ள கடற்கரைப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 45-50 கி.மீ. வரையிலும் அதிகரிக்கக்கூடும்.
சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைப் பகுதிகளில் அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அதேவேளை, சிலாபம் முதல் கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையிலும், காங்கேசன்துறை முதல் வக்கரை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரைப் பகுதிகளில் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்.
கொழும்பிலிருந்து காலி வரையிலும், அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும் கடற்கரையிலிருந்து கடலின் உயரம் சுமார் (2.0 – 3.0) மீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல).
இந்நிலையில், மீன்பிடி மற்றும் கடற்படை சமூகம் இதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |