கல்முனை கல்வி வலய பாடசாலைகளில் 'சுத்தமான இலங்கை' வேலைத்திட்டம் ஆரம்பம் !

Sri Lankan Peoples Eastern Province School Incident Clean Sri lanka
By Rakshana MA Jul 10, 2025 12:25 PM GMT
Rakshana MA

Rakshana MA

டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்களிலிருந்து பாடசாலை மாணவர்களையும், பாடசாலை சமூகத்தையும் பாதுகாக்கும் நோக்கில், Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக Clean Steps – Safe Space எனும் செயற்திட்டம் நேற்று (09) சாய்ந்தமருது மற்றும் கல்முனை பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த செயற்திட்டம், கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயம், சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை, சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயம், கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயம், கல்முனை அல் அஸ்கர் வித்தியாலயம், சாய்ந்தமருது ரியாளுல் ஜன்னா வித்தியாலயம் என பல்வேறு பாடசாலைகளில், அதிபர்களின் தலைமையில் செயல்படுத்தப்பட்டது.

வர்த்தக வரி குறித்து அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் இலங்கை அரசாங்கம்..!

வர்த்தக வரி குறித்து அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் இலங்கை அரசாங்கம்..!

திட்டத்தின் நோக்கம் 

இலங்கையை தூய்மையான மற்றும் ஆரோக்கியமான நாடாக மாற்றும் நோக்கத்தில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டம், மாணவர்களுக்கு தூய்மை மற்றும் சுகாதாரப் பழக்கங்களை ஊக்குவிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது.

பாடசாலை சூழலை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதன் மூலம், சிறந்த கற்றல் சூழல் உருவாகும் என்பது இதன் முக்கிய நோக்கம்.

கல்முனை கல்வி வலய பாடசாலைகளில்

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், பாடசாலை வளாகம் சுத்தப்படுத்துதல் கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகள் சுகாதார வசதிகளை மேம்படுத்தல் மாணவர்களுக்கு பொறுப்புணர்வு மற்றும் ஒழுக்க விழுமியங்களை ஊக்குவித்தல் எனப் பல செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

அத்துடன் இந்த நிகழ்வில், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர், பிரதித் தலைமை ஆசிரியர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து பங்கேற்றனர்.

மேலும் இவ்வாறான நிகழ்வுகள், எதிர்கால சந்ததியினரிடம் தூய்மை மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அவற்றை ஒரு வாழ்க்கை முறையாக ஏற்கச் செய்யும் சமூகத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அநுரவுக்கு மீண்டும் ட்ரம்பிடமிருந்து வந்த கடிதம்

அநுரவுக்கு மீண்டும் ட்ரம்பிடமிருந்து வந்த கடிதம்

சாராவின் மரணத்தில் மூன்றாவது டி.என்.ஏ சோதனை: அமைச்சர் வெளியிட்ட தகவல்

சாராவின் மரணத்தில் மூன்றாவது டி.என்.ஏ சோதனை: அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery