வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: 8 பேர் காயம்

Batticaloa Sri Lankan Peoples Hospitals in Sri Lanka
By Rakshana MA Jan 25, 2025 01:29 PM GMT

வாழைச்சேனை(Valaichenai) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மோதல் சம்பவம் நேற்று(24) செம்மண்ணோடையில் இடம்பெற்றுள்ளது.

மகிந்த தரப்பின் கோடிக்கணக்கான டொலர்கள்! அநுரவின் நடவடிக்கை என்ன

மகிந்த தரப்பின் கோடிக்கணக்கான டொலர்கள்! அநுரவின் நடவடிக்கை என்ன

இரு தரப்பினருக்கிடையிலான மோதல் 

அத்துடன், இந்த சம்பவத்தில் காயமடைந்த இரு குழுக்களையும் சேர்ந்த எட்டுப்பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அதில், நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: 8 பேர் காயம் | Clash Between Two Groups In Valaichenai

இந்த நியைில், இரு குழுக்களிலும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்டோர் இந்த தகராரில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தொலைபேசி பாவனையாளர்களுக்கு வெளியான தகவல் - கடுமையாகும் சட்டம்

தொலைபேசி பாவனையாளர்களுக்கு வெளியான தகவல் - கடுமையாகும் சட்டம்

புலமைப் பரிசில் பரீட்சையில் வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மாவட்டத்தில் முதலிடம்

புலமைப் பரிசில் பரீட்சையில் வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மாவட்டத்தில் முதலிடம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW