சாய்ந்தமருதில் ரணிலின் பிரசார கூட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்

Ampara Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 12, 2024 04:58 AM GMT
Laksi

Laksi

அம்பாறை - சாய்ந்தமருதில் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவமானது நேற்று (11) மாலை இடம்பெற்ற 'இயலும் சிறீலங்கா' கூட்டத்தின் நிறைவுக்கு பின் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு

தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு

வாய்த்தர்க்கம்

ஜனாதிபதியுடன் முண்டியடித்துக் கொண்டு கைலாகு கொடுக்கும் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த குழு மோதலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

சாய்ந்தமருதில் ரணிலின் பிரசார கூட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் | Clash At Saintamaruthu Election Campaign Platform

இதனால் குறித்த வளாகத்தில் சில நிமிடங்கள் பதற்றம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு கலகமடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிவு: நாடு திரும்புவோருக்கான அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிவு: நாடு திரும்புவோருக்கான அறிவிப்பு

இந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ரணிலுக்கு வாக்களிப்போம்: அசங்க நவரத்ன

இந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ரணிலுக்கு வாக்களிப்போம்: அசங்க நவரத்ன

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW