நாட்டின் பல பகுதிகளில் கன மழைக்கான வாய்ப்பு

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Sep 02, 2024 02:26 AM GMT
Rukshy

Rukshy

நாட்டின் பல பகுதிகளில் கன மழைக்கான வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (02) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்துள்ள தீர்மானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்துள்ள தீர்மானம்

இடியுடன் கூடிய மழை

இந்நிலையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் கன மழைக்கான வாய்ப்பு | Chance Of Heavy Rain In Many Parts Of The Country

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் .

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

சஜித் தலைமையிலான அரசாங்கம் வந்தால் ஜனாதிபதி மாளிகை பல்கலைக்கழகமாக மாறும் : ஹரீஸ்

சஜித் தலைமையிலான அரசாங்கம் வந்தால் ஜனாதிபதி மாளிகை பல்கலைக்கழகமாக மாறும் : ஹரீஸ்

ரணில் - சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்து சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள கோரிக்கை

ரணில் - சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்து சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள கோரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW