தென்கிழக்கு பல்கலையில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரண்டாம் மொழி கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பலகலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தின் கேட்போர்கூடத்தில் பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எச்.எம்.நிஜாம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த கற்கை நெறியை, தென்கிழக்கு பல்கலைக்கழக பணியாளர் மேம்பாட்டு நிலையமும் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் (NILET) இணைந்து நடாத்தியுள்ளது.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீத் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
கற்கை நெறியின் இணைப்பாளர் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.எச்.நபாரின் வழிகாட்டலில் இடம்பெற்ற இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் கயன் பொதுப்பிடிய கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டுள்ளார்.
அத்தோடு, விசேட அதிதிகளாக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம்.முஸ்தபா, பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ.ஹலிம், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி அஷ் ஷேய்க் எம்.எச்.ஏ.முனாஸ், கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








