இலங்கை மின்சார சபைக்கு 13.1 பில்லியன் ரூபா இழப்பு

CEB Sri Lanka Electricity Prices Economy of Sri Lanka Money
By Rakshana MA Aug 17, 2025 09:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு, இலங்கை மின்சார சபை (CEB) 13.1 பில்லியன் ரூபா இழப்பைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

அத்துடன் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் 5.31 பில்லியன் ரூபா லாபம் ஈட்டியுள்ளதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

எனினும், கடந்த ஆண்டு இதே காலாண்டில் இலங்கை மின்சார சபைக்கு 34 பில்லியன் ரூபாய் இலாபம் கிடைத்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சி ஹர்த்தாலுக்கு உதவி கேட்க முதல் முஸ்லிம் விரோத செயல்களை கைவிட வேண்டும்

தமிழரசுக் கட்சி ஹர்த்தாலுக்கு உதவி கேட்க முதல் முஸ்லிம் விரோத செயல்களை கைவிட வேண்டும்

கட்டணக் குறைப்பு

இரண்டு முறை மின்சார கட்டணக் குறைப்புகளுக்குப் பின்னர் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மின்சார சபைக்கு 13.1 பில்லியன் ரூபா இழப்பு | Ceb Reports Rs 13 1B Loss 2025

அதற்கமைய, கடந்த வருடத்தின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் வருமானம் 33 சதவீதம் குறைந்து 98 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் செலவுகள் சுமார் 92 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.

எனினும், இந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, இரண்டாவது காலாண்டு வருமானம் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.

அதற்கமைய, வருமானம் 93 பில்லியன் ரூபாவிலிருந்து 98 பில்லியன் ரூபாவாக உயர்ந்தது.

பலஸ்தீனத்தை துண்டாக்கும் இஸ்ரேலின் புதிய திட்டம்! பிரான்ஸ் கடும் கண்டனம்

பலஸ்தீனத்தை துண்டாக்கும் இஸ்ரேலின் புதிய திட்டம்! பிரான்ஸ் கடும் கண்டனம்

13.1 பில்லியன் இழப்பு

மேலும் செலவுகள் 112 பில்லியன் ரூபாவிலிருந்து இருந்து 92 பில்லியன் ரூபாவாகக் கடுமையாகக் குறைந்துள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு 13.1 பில்லியன் ரூபா இழப்பு | Ceb Reports Rs 13 1B Loss 2025

இதனிடையே, 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு, இலங்கை மின்சார சபை 13.1 பில்லியன் ரூபா இழப்பைப் பதிவு செய்துள்ளது.

விசேடமாக மார்ச் மாதத்தில் ஏற்பட்ட பெரும் இழப்புகள் இதில் தாக்கம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான நால்வரிடம் விசாரணை முன்னெடுப்பு

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான நால்வரிடம் விசாரணை முன்னெடுப்பு

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW