திருகோணமலை வீதியில் வெடிபொருட்கள் கொண்டு சென்ற லொறி மீட்பு

Trincomalee Sri Lankan Peoples Eastern Province Crime
By Rakshana MA Jun 30, 2025 10:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஹபரண – திருகோணமலை பிரதான வீதியில், வெடிபொருட்கள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் லொறி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம், ஹதரஸ் கொட்டுவ பொலிஸ் நிலையம் மற்றும் அதனுடன் இணைந்த அதிகாரிகள் மேற்கொண்ட வழக்கமான சோதனை நடவடிக்கையின் போது இடம்பெற்றுள்ளது.

சோதனையின் போது, சாரதியின் இருக்கை கீழ், டாஷ்போர்டின் அடிவசதி பகுதியில் சிக்கலான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிக சக்தி வாய்ந்த C-4 வகை வெடிபொருட்கள் கொண்ட பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை கடற்றொழிலாளியின் உயிரை பறித்த மீன்!

வாழைச்சேனை கடற்றொழிலாளியின் உயிரை பறித்த மீன்!

பாதுகாப்பு அச்சுறுத்தல் 

கண்டுபிடிக்கப்பட்ட C-4 வெடி மருந்தின் எடை சுமார் 156.07 கிராம் எனவும், இது மிகவும் அதிவலிமை வாய்ந்த வெடிகுண்டாக இருப்பதுடன், அதிகாரபூர்வ அனுமதியின்றி இவ்வகை வெடிபொருட்கள் ஏற்றி செல்வது கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை வீதியில் வெடிபொருட்கள் கொண்டு சென்ற லொறி மீட்பு | C4 Explosives Found In Lorry Srilanka

இச்சம்பவம் தொடர்பாக லொறி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அதிகாரிகளால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வகை வெடிபொருட்கள் பொதுமக்கள் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தாக இருப்பதால், இது தொடர்பான விசாரணைகளுக்கு விரிவான தேசிய பாதுகாப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆசியாவின் இஸ்ரேலாக மாறவுள்ள இலங்கையின் வடக்கு - கிழக்கு

ஆசியாவின் இஸ்ரேலாக மாறவுள்ள இலங்கையின் வடக்கு - கிழக்கு

மட்டக்களப்பு கிரான்குளத்தில் தனியார் பேருந்து விபத்து

மட்டக்களப்பு கிரான்குளத்தில் தனியார் பேருந்து விபத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW