மட்டக்களப்பில் நடுக்காட்டில் ஆசிரியரை இறக்கிவிட்டுச் சென்ற பேருந்து!

Batticaloa Sri Lanka Police Investigation Crime
By Laksi Aug 13, 2024 06:27 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பில் இலங்கை போக்குவரத்துச்சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த ஆசிரியர் ஒருவரை நடுக்காட்டில் இறக்கி விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று (12) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முனை - யாழ் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச்சபை மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான BN NC 1554 இலக்கமுடைய பேருந்து வண்டியில் பயணித்த ஆசிரியர் ஒருவருக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரச ஓய்வூதியதாரர்களுக்கான மேலதிக கொடுப்பனவு: நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

அரச ஓய்வூதியதாரர்களுக்கான மேலதிக கொடுப்பனவு: நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

யானைகள் நடமாட்டமுள்ள காடு

சம்பவம் தொடர்பில் ஆசிரியர் தெரிவிக்கையில், நேற்றைய தின மட்டக்களப்பு எல்லைக் கிராமமப்புற பாடசாலையான ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்திலிருந்து ஓட்டமாவடிக்கு வருவதற்காக மேற்படி இலக்கமுடைய பேருந்து வண்டியில் பயணித்த சமயம் இடைநடுவே என்னுடைய பிரயாணப்பை பேரூந்திலிருந்து தவறி விழுந்து விட்டது.

மட்டக்களப்பில் நடுக்காட்டில் ஆசிரியரை இறக்கிவிட்டுச் சென்ற பேருந்து! | Bus Dropped Teacher In The Middle Of Forest

அதை நன்கு அவதானித்த சாரதி பேரூந்தை நிறுத்தி என்னுடைய பையை எடுத்து வரும் வரையில் காத்து நிற்பதாகச் சொன்னார்.நான் அந்தப்பையை எடுக்கச் சென்றதும் யானைகள் நடமாட்டமுள்ள காட்டுக்குள் என்னை தன்னந்தனியே விட்டுச்சென்று விட்டார்.

உயிருக்கு உத்தரவாதமில்லாத அந்த நடுக்காட்டில் கொழுத்தும் வெயிலில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அச்சத்தோடு காத்திருந்து ஓட்டமாவடி வந்தடையும் துர்ப்பார்க்கிய நிலை ஏற்பட்டது.

முகப்புத்தக பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முகப்புத்தக பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உரிய நடவடிக்கை

அதிக பேருந்து வண்டிகள் பயணத்தில் ஈடுபடாத இப்பாதையில் அரச பேருந்துகளை நம்பி பயணித்து கஷ்டப்பிரதேச பாடசாலைகளுக்கு கற்பிக்கச் செல்கின்ற ஆசிரியரான எனக்கே இவ்வாறான நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்.

மட்டக்களப்பில் நடுக்காட்டில் ஆசிரியரை இறக்கிவிட்டுச் சென்ற பேருந்து! | Bus Dropped Teacher In The Middle Of Forest

இவ்வாறான மோசமான செயல்களில் ஈடுபடும் ஒரு சில சாரதி, நடத்துனர்களால் ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் அவப்பெயர் ஏற்படுவதுடன், அரச பேரூந்துகளை நம்பி பயணிக்கும் அரச ஊழியர்கள், பொது மக்களுக்கும் அசெளகரியங்கள், நம்பிக்கையீனங்களும் ஏற்படுகின்றது எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் தெரிவித்தார்.

இந்தவிடயம் தொடர்பில் இ.போ.சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW