இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka India
By Mayuri Aug 13, 2024 03:57 AM GMT
Mayuri

Mayuri

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பயணிகள் படகுச் சேவை இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கசன்துறைக்கு இயக்கப்படவுள்ளது.

இதேவேளை பயணிகள் படகு சேவைக்கான பயண சீட்டுகள் நேற்று (12) முதல் முன்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்போடப்பட்ட திகதி

மேலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்த பயணிகள் படகுச் சேவையானது மே 13ஆம் திகதி இடம்பெறுவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை தொடர்பில் வெளியான தகவல் | Boat Service Between Sri Lanka And India

ஆனால் பல்வேறு காரணங்களால் அது பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW