சிறந்த முன்மாதிரி போட்டியில் முதலிடம் பெற்ற சாய்ந்தமருது அரசினர் பாடசாலை

Sri Lanka Sri Lankan Peoples Kalmunai School Incident
By Rakshana MA Mar 18, 2025 12:21 PM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனை கல்வி வலய மட்டத்தில் 2024-12-24 ஆம் திகதி நடைபெற்ற பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் "சிறந்த முன்மாதிரி" (Best Practices Competition -2024) போட்டியில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்) முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

இதற்கான சான்றிதழும் வெற்றிக் கிண்ணமும் நேற்று (17) கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற கணக்காய்வு முகாமைத்துவ கூட்டத்தை தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆன் ஏன் தடை செய்யப்பட்டது... கேள்வியெழுப்பியுள்ள ஹிஸ்புல்லாஹ் எம்.பி

தமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆன் ஏன் தடை செய்யப்பட்டது... கேள்வியெழுப்பியுள்ள ஹிஸ்புல்லாஹ் எம்.பி

போட்டியில் முதலிடம்

கல்முனை வலயக் கல்வி அலுவலக கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.றியாஸாவின் நெறிப்படுத்தலில் வலய கணக்காளர் கே.லிங்கேஸ்வரனின் பங்குபற்றுதலுடன் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் தலைமையில் கிழக்கு மாகாண கணக்காய்வு அத்தியட்சகர் ஏ.நிஸாமினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சிறந்த முன்மாதிரி போட்டியில் முதலிடம் பெற்ற சாய்ந்தமருது அரசினர் பாடசாலை | Best Practices Competition 2024

மேலும் குறித்த சாதனைக்காக அனைவரும் பாடசாலை சமூகத்தை பாராட்டியுள்ளனர்.

பேரீச்சம் பழத்திற்காக பள்ளிவாயல் மௌலவி மீது தாக்குதல்

பேரீச்சம் பழத்திற்காக பள்ளிவாயல் மௌலவி மீது தாக்குதல்

அநுர அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்

அநுர அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery