குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம்! ரணில்

Ranil Wickremesinghe Sri Lanka
By Mayuri Sep 01, 2024 04:15 AM GMT
Mayuri

Mayuri

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

நிவாரணம் கிடைக்கப்பெறாதவர்களுக்குச் சந்தர்ப்பம்

அவர் மேலும் தெரிவிக்கையில், நிவாரணம் கிடைக்கப்பெறாதவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்குவதற்காக அஸ்வெசும நிவாரணம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வழங்கப்படும். சிலர் வரிகளைக் குறைப்பதாகக் கூறுகின்றனர்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம்! ரணில் | Aswesuma For Low Income Families

அவ்வாறு செய்வதால் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் அனைத்து நிதிகளும் நிறுத்தப்படும். அதன் பின்னர் நாடு 2022 ஆம் ஆண்டை விடவும் மோசமான நிலைக்குச் செல்ல நேரிடும் என குறிப்பிட்டார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW