ஆஸ்துமா நோய் தொடர்பில் சுகாதார பிரிவு வெளியிட்ட தகவல்
நாட்டிலுள்ள மக்களிடையே தற்போது ஆஸ்துமா நோய் அதிகரித்து வருவதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், உலகளவில் 1,00,000 பேரில் 3,340 பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுவாச வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே 6ஆம் திகதி உலக ஆஸ்துமா தினத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது அவர் இந்தக் கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்
சுகாதார பிரிவின் அறிக்கை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நோயானது உலகளவில் இளைஞர்களிடையே பரவலாக உள்ளது.
அத்தோடு, இன்ஹேலர் அடிப்படையிலான சிகிச்சையானது பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் ஆஸ்துமாவை குணப்படுத்த முடியும்.
மேலும், மக்கள் தொகையில் ஆஸ்துமா பரவலாக இருந்தாலும், நாட்டில் பல நபர்கள் கண்டறியப்படாமல் உள்ளனர் என்று கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |