கல்முனையில் மாகாண மட்ட போட்டிகளுக்கு தகுதிபெற்ற மாணவர்கள்
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான வலய மட்ட விளையாட்டுப் போட்டியில், சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள் பெருமைமிகு சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த வருடத்தைப் போலவே இவ்வாண்டும் அவர்கள் 10 வெற்றிகளைப் பதிவு செய்து மாகாண மட்ட போட்டிகளில் பங்கேற்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
மாகாண மட்டப்போட்டி
இந்த போட்டிகளில் 2 முதலாமிடங்கள், 5 இரண்டாமிடங்கள் மற்றும் 3 மூன்றாமிடங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
இந்த வெற்றிக்கு பங்களிப்பு செய்த மாணவச்செல்வங்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலையின் விளையாட்டுப் பொறுப்பாசிரியர் எம்.எப்.எம்.றிபாஸ், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் என்.எம்.ஏ. ஆபாக், இணைப்பாடவிதான பொறுப்பதிபர் எம்.எப்.எம்.ஆர்.ஹாத்தீம், பிரதி அதிபர் எஸ்.எம்.சுஜான் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் அனைவருக்கும் பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் சார்பில் பாடசாலை சமூகம் முழுவதும் சார்ந்து பாராட்டுகளும், நன்றிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

