கட்சியின் முடிவுக்கு மாற்றமாக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : தாஹிர் எம்.பி

Sri Lanka Politician Sri Lankan Peoples Eastern Province
By H. A. Roshan Jun 12, 2025 04:43 AM GMT
H. A. Roshan

H. A. Roshan

கட்சியின் முடிவுகளை மீறி செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார்.

நேற்று (11) திருகோணமலை ஜேபாக் மண்டபத்தில் நடைபெற்று உறுப்பினர்களின் சத்தியபிரமாண நிகழ்வில் கலந்து கொண்ட போதே மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் நாடாளாவிய ரீதியில் தெரிவான 140 உறுப்பினர்களின் சத்தியபிரமாண நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

மட்டக்களப்பில் 8130 மில்லியன் பெறுமதியான திட்டங்களுக்கு அனுமதி

மட்டக்களப்பில் 8130 மில்லியன் பெறுமதியான திட்டங்களுக்கு அனுமதி

கட்சியின் முடிவு

அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தலில் வெற்றிபெற்ற 140 உறுப்பினர்களும் கட்சியின் கொள்கைகளோடு ஒத்துழைத்து செயற்பட வேண்டும்.

Ashraff Thahir MP

மேலும், இது கட்சியின் உயர்மட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். எந்தவொரு பாகுபாடும் இல்லாமல், கட்சி ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து: 15 பேர் பலத்த காயம்

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து: 15 பேர் பலத்த காயம்

திருகோணமலையில் பிடியளவு கமநிலத்திற்கு என்ற தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

திருகோணமலையில் பிடியளவு கமநிலத்திற்கு என்ற தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW