கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து: 15 பேர் பலத்த காயம்
Colombo
Monaragala
Accident
By Mayuri
மொனறாகலையிலிருந்து கொழும்பை நோக்கி பயணிகளுடன் பயணித்த பேருந்து விபத்திற்கு இலக்காகியுள்ளது.
குறித்த சம்பவம் ஒருகொடவத்தை வீதியோரத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த பேருந்து, வீதியோரம் தொடராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனங்கள் மீது பின்புறமாக மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள தகவல்
சம்பவத்தில் 15 இற்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும் தொடராக நிறுத்தப்பட்டிருந்து பத்துக்கு மேற்பட்ட வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
