நாடாளுமன்ற பொதுக்கழிப்பறை குறித்து அர்ச்சுனா எம்.பியின் கோரிக்கை
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பொது கழிப்பறையை இரவில் திறந்து வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய தினம், அவர் குறித்த கோரிக்கையை முன்வைத்தள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சிரமத்தில் பொலிஸ் அதிகாரிகள்..
நாடாளுமன்ற பொது கழிப்பறை பூட்டப்பட்டிருப்பதால், நாடாளுமன்றத்தில் பணியில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொள்வதாக அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தில் பணியில் உள்ள பொலிஸ் அதிகாரிகள், கழிப்பறையில் உள்ள பொருத்துதல்கள் திருடப்பட்டதால், மாலை 4.30 மணிக்கு பொது கழிப்பறை மூடப்பட்டுள்ளதாகவும், இந்த முடிவால் அவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் முறையிட்டதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இரவில் பொது கழிப்பறையை திறந்து வைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.