அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவம்! அனைவரையும் ஒன்றிணையுமாறு கோரிக்கை

Tamils Ampara Eastern Province General Election 2024
By Laksi Oct 01, 2024 11:57 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் குமாரசாமி புஸ்பகுமார் தெரிவித்துள்ளார்.

அம்பாறை ஊடக அமையத்தில் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் நேற்று (30) இரவு இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்டத்தில் உறுதிப்படுத்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் நாளை மறு தினம் பூட்டு

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் நாளை மறு தினம் பூட்டு

தமிழ் பிரதிநிதித்துவம்

ஏனெனில், கடந்த கால தேர்தலில் அம்பாறை மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டிய தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு பல்வேறு தரப்பினரும் அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்து எமது மக்களின் வாக்குகளை சிதறடித்தனர்.

அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவம்! அனைவரையும் ஒன்றிணையுமாறு கோரிக்கை | All Parties Unite To Get Tamil Representation

இம்முறையும் அவ்வாறு எமது பிரதிநிதித்துவத்தை இழந்து விடாமல் இருப்பதற்கு சகல கட்சிகளும் ஒன்றிணைய சகலரும் ஒத்துழைப்பு செய்ய முன்வர வேண்டும் என கோரியுள்ளார்.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

லிட்ரோவுக்கு புதிய தலைவர் நியமனம்

லிட்ரோவுக்கு புதிய தலைவர் நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW