கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன
Trincomalee
Sri Lanka
Sri Lankan Peoples
Eastern Province
Floods In Sri Lanka
By Rakshana MA
கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகளும் ஒரு அடி அளவுக்கு திறக்கப்பட்டுள்ளன.
கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் நேற்று(11) திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாகும். கன மழை காரணமாக தற்போது நீரின் கொள்ளளவு 112,445 கன அடியாக உயர்ந்துள்ளது.
தற்போது வினாடிக்கு 800 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றதாகவும் கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தின் தாக்கமாக, கந்தளாய் பகுதியில் நேற்று முதல் தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


