பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் நடாத்தப்படும் அனைத்து மேலதிக வகுப்புகளும் இன்று(11) நள்ளிரவுடன் நிறுத்தப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற மின்னணு ஊடகங்கள் மூலம் உதவி வழங்குதலுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கான கோரிக்கை
இந்த நிலையில், பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் இன்று நள்ளிரவுக்குப் பிறகு நடத்தப்பட்டால், பொலிஸாருக்கு தகவல் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொலிஸ் தலைமையகம் - 0112421111, பொலிஸ் அவசர இலக்கம் - 119, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் - 1911, பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளை - 011 278 4208 / 011 278 4537 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |