அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளராக ஏ.எல் மஹ்ரூப் நியமனம்

Ampara Trincomalee Eastern Province
By Laksi Aug 12, 2024 06:08 AM GMT
Laksi

Laksi

அம்பாறை மாவட்டத்தின் பிரதான கணக்காளராக சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.எல் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (12) அவர் உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

தேர்தலை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு கண்காணிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி

தேர்தலை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு கண்காணிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி

பிரதம கணக்காளர்

அத்தோடு, மஹ்ரூப் (1999.05்.17) இல் கணக்காய்வாளர் சேவை பரீட்சையில் சித்தியடைந்ததுடன் (2002.01.02) இல் இலங்கை கணக்காளர் சேவை பரீட்சையில் சித்தியடைந்து அம்பாறை, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, கல்முனை, உகன, தகன ஆகிய பிரதேச செயலகங்களில் கணக்காளராக கடமையாற்றியுள்ளார்.

அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளராக ஏ.எல் மஹ்ரூப் நியமனம் | Al Mahroob Appointed Chief Accountant Of Ampara

இந்தநிலையில், இவர் கணக்காளர் சேவையில் தரம் 1இற்கு 2012ஆம் ஆண்டில் இருந்து தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

மேலும், (2018.02.17) முதல் திருகோணமலை மாவட்ட பிரதான உள்ளக கணக்காய்வாளர் ஆக பல்வேறு பதவிகளிலும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை

ஜனாதிபதித் தேர்தலில் சந்திரி்க்காவின் ஆதரவு யாருக்கு..! வெளியான தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் சந்திரி்க்காவின் ஆதரவு யாருக்கு..! வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW