மாணவர்களை குறிவைக்கும் சைபர் தாக்குதல்! அமைச்சு முன்னெடுத்த நடவடிக்கை

Ministry of Education Education schools
By Rakshana MA May 27, 2025 03:40 AM GMT
Rakshana MA

Rakshana MA

மாணவர்கள் மீதான சைபர் அத்துமீறல் மற்றும் பாலியல் ரீதியான தாக்கங்களை தடுக்க கல்வி அமைச்சு நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

அதற்கமைய, சைபர் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய சட்டங்களை உருவாக்கும் செயல்முறையை கல்வி அமைச்சு தொடங்கவுள்ளது.

இந்த விடயத்தினை கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்த இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

முக்கிய கலந்துரையாடலுக்கு இந்தியா சென்ற நாடாளுமன்ற குழு

முக்கிய கலந்துரையாடலுக்கு இந்தியா சென்ற நாடாளுமன்ற குழு

கடுமையான சட்டம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குழந்தைகளின் பாதுகாப்பைக் கையாள தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை.

அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் மீதான அத்துமீறல்களை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கும் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

மாணவர்களை குறிவைக்கும் சைபர் தாக்குதல்! அமைச்சு முன்னெடுத்த நடவடிக்கை | Activities Of The Ministry Of Education

சுகாதார அமைச்சகமும் கல்வி அமைச்சகமும் சமீபத்தில் வெளியிட்ட ஒரு கூட்டு விரிவான ஆய்வில், சைபர் மிரட்டல் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த கல்வியை வலுப்படுத்துவது அவசியம், அத்தகைய நடத்தைக்கு எதிராக ஒரு தடுப்பு இருக்க வேண்டும் என்றும் காட்டுகிறது.

அதேவேளை, பாடசாலை குழந்தைகளிடையே மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு அதிகரித்துள்ளது, எனவே, தேவைப்பட்டால் குழந்தைகளுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதற்காக அனைத்துப் பாடசாலைகளிலும் ஆலோசனை மையங்களை அமைச்சகம் நிறுவும் என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.  

மட்டக்களப்பில் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கல்முனை வெஸ்லி பாடசாலைக்கு தனியார் அமைப்பினால் வழங்கப்பட்ட சன்மானங்கள்!

கல்முனை வெஸ்லி பாடசாலைக்கு தனியார் அமைப்பினால் வழங்கப்பட்ட சன்மானங்கள்!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW