யாழில் தாக்கப்பட்ட வெற்றிலை வியாபாரி

Sri Lanka Sri Lanka Police Investigation Jaffna Teaching Hospital
By Harrish Jul 26, 2024 11:01 PM GMT
Harrish

Harrish

யாழ்ப்பாணம் - மருதனார்மடத்தில் வெற்றிலை வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வன்முறை சம்பவம் கடந்த வியாழக்கிழமை (25.07.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 29 வயதுடைய நபரொருவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை

குறித்த இளைஞன் வியாபாரத்தினை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்கின்ற வேளையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் தாக்கப்பட்ட வெற்றிலை வியாபாரி | A Violent Mob Attacked A Betel Trader In Jaffna

மேலும், தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் நால்வரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்து நேற்றையதினம்(26) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அவர்களை விளக்குமறியலில் வைக்குமாறு நீதிமான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இந்த தாக்குதல் சம்பவமானது முன்பகை காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW