அம்பாறை மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதியானோர் தொடர்பில் வெளியான தகவல்

Ampara Eastern Province Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 28, 2024 09:37 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அந்த மாவட்ட தேர்தல் அதிகாரி சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

 அத்தோடு, அம்பாறை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 04 ஆக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அம்பாறை 188222 பேர், சம்மாந்துறை 99727 பேர், கல்முனை 82830 பேர், பொத்துவில் தொகுதியில் 184653 பேர் உள்ளனர்.

திருகோணமலையில் காட்டு யானை தாக்கியதில் மாணவன் படுகாயம்

திருகோணமலையில் காட்டு யானை தாக்கியதில் மாணவன் படுகாயம்

வாக்களிப்பு நிலையங்கள்

தபால் மூல வாக்களிப்புக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 27645 ஆகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 26778எனவும் 867 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதியானோர் தொடர்பில் வெளியான தகவல் | 555432 People Vote In Presidential Election Ampara

42 மையங்களில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என்றும், ஹார்டி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் வாக்கு எண்ணும் பணி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் 184 வாக்களிப்பு நிலையங்களும், சம்மாந்துறையில் 93 வாக்களிப்பு நிலையங்களும், கல்முனையில் 74 வாக்களிப்பு நிலையங்களும், பொத்துவிலில் 177 வாக்களிப்பு நிலையங்களும் உள்ளடங்கலாக அம்பாறை மாவட்டத்தில் 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாகவும் சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் ஹக்கீம், ரிஷாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்

அம்பாறையில் ஹக்கீம், ரிஷாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW