திருகோணமலையில் காட்டு யானை தாக்கியதில் மாணவன் படுகாயம்

Trincomalee Sri Lanka Police Investigation Elephant
By Laksi Aug 28, 2024 07:59 AM GMT
Laksi

Laksi

காட்டு யானை தாக்கியதில் பாடசாலை மாணவன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்மபவமானது மூதூர் - ஸ்ரீ நாராயணபுரம் பகுதியில் இன்று (28) இடம்பெற்றுள்ளது.

கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

முதலாவதாக வருபவர்களுக்கு முன்னுரிமை! கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான தகவல்

முதலாவதாக வருபவர்களுக்கு முன்னுரிமை! கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான தகவல்

மேலதிக விசாரணை

குறித்த மாணவன் பிரத்தியேக வகுப்பு ஒன்றிற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றபோது ஸ்ரீ நாராயணர் ஆலயத்திற்கு முன்னால் வைத்து யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையில் காட்டு யானை தாக்கியதில் மாணவன் படுகாயம் | Elephant Attack For School Student In Mutur

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டிலிருந்து வந்தவர் வவுனியாவில் கொலை: சந்தேகநபர்கள் இருவர் கைது

வெளிநாட்டிலிருந்து வந்தவர் வவுனியாவில் கொலை: சந்தேகநபர்கள் இருவர் கைது

சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW