வெளிநாட்டிலிருந்து வந்தவர் வவுனியாவில் கொலை: சந்தேகநபர்கள் இருவர் கைது

Vavuniya
By Mayuri Aug 28, 2024 02:11 AM GMT
Mayuri

Mayuri

வவுனியா - கனகராயன்குளம், சின்னடம்பன் பிரதேசத்தில் நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஐய்யனார் கோவிலில் இடம்பெற்ற திருவிழாவின் பின்னர், அங்குள்ள வீடொன்றில் சுவிஸில் இருந்து வருகை தந்தவரும் அவரது உறவினர் ஒருவரும் தங்கி இருந்துள்ளனர்.

அன்றையதினம் இரவு குறித்த இருவரும் மது போதையில் உறங்கியுள்ளனர்.

சந்தேகநபர்கள் கைது

இதன்போது வீட்டுக்குள் நுழைந்த சிலர், மற்றைய நபரை வீட்டிற்குள் இருந்து இழுத்து வெளியே போட்டுவிட்டு, சுவிஸில் இருந்து வருகை தந்த நபரைக் கொலை செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர் வவுனியாவில் கொலை: சந்தேகநபர்கள் இருவர் கைது | Vavuniya Murder Case

சம்பவம் தொடர்பில், கொலை செய்யப்பட்டவருடன் வீட்டில் தங்கியிருந்த நபரும், அண்மையில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து வவுனியா உக்கிளாங்குளத்தில் வசித்து வரும் நபர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதேவேளை அந்த வீட்டிலிருந்த சிசிடிவி கமராவை இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW