வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை நிறைவு

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 15, 2024 07:22 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இன்று (15) காலை 9.00 மணிக்கு ஆரம்பமான வேட்புமனுத் தாக்கல் முற்பகல் 11.00 மணிக்கு நிறைவடைந்துள்ளது.

இந்தநிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப் பணங்களைச் செலுத்திய 40 வேட்பாளர்களில் 39 பேர் தமது வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வேலுகுமார் எம்.பி ரணிலுக்கு ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் வேலுகுமார் எம்.பி ரணிலுக்கு ஆதரவு

வேட்புமனுத் தாக்கல்

அத்தோடு, வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்ட பின்னர் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்காக தற்போது 11.30 மணி வரை காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை நிறைவு | 39 Presidential Candidates Filed Nomination Papers

மேலும், இன்றைய தினம் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தை அண்மித்த பகுதிகள் விசேட பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாக்குச்சீட்டு அச்சிடப்படும் பணிகள் தொடர்பில் வெளியான தகவல்

வாக்குச்சீட்டு அச்சிடப்படும் பணிகள் தொடர்பில் வெளியான தகவல்

பங்களாதேஷ் இடைக்கால தலைவருடன் உரையாடியுள்ள ரணில்

பங்களாதேஷ் இடைக்கால தலைவருடன் உரையாடியுள்ள ரணில்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW