காத்தான்குடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று சிறுவர்கள் காயம்

Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province
By Laksi Sep 16, 2024 09:51 AM GMT
Laksi

Laksi

காத்தான்குடியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் மூன்று சிறுவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று (16) காத்தான்குடி 6ம் குறிச்சி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரத்தியேக வகுப்புக்கு சென்று விட்டு ஆறு சிறுவர்கள் முச்சக்கரவண்டியில் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது பிரதான வீதி வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

பொலிஸார் விசாரணை

முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று சிறுவர்கள் காயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று சிறுவர்கள் காயம் | 3 Childrens Injured In Auto Accident In Kattankudy

இதன்போது, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் பாடசாலை சிறுவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக முறைப்பாடு

மட்டக்களப்பில் பாடசாலை சிறுவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக முறைப்பாடு

வாக்களிப்பு தினத்தன்று ஊரடங்கை பிரகடனப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை! பாதுகாப்பு அமைச்சு

வாக்களிப்பு தினத்தன்று ஊரடங்கை பிரகடனப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை! பாதுகாப்பு அமைச்சு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW