நிந்தவூரில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் இளம்பெண்! அதிரடியாக கைது செய்யப்பட்ட மூவர்
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நீண்ட காலமாக போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த இளம்பெண் உட்பட மூவர் சாகாமம் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இவ்வாறு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த இளம்பெண் உள்ளிட்ட 27 ,32 வயதிற்குட்பட்ட சந்தேக நபர் மூவர் கைது செய்யப்பட்டனர்.
அதிரடி கைது
அதேவேளை, இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து ஒரு தொகுதி ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டது.
மேலும் இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


