சீன ஒலிம்பியாட் போட்டிக்கு கல்முனை மாணவர் தெரிவு
சீனாவில் நடைபெற்ற சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட் முகாமில் பங்கேற்கும் வாய்ப்பினை கல்முனை கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பெற்றுள்ளார்.
மாவடிப்பள்ளி கமு/கமு/அல் - அஷ்ரஃப் மஹா வித்தியாலய மாணவன் யாகூப் முஹம்மட் ஹிக்கம், 2024ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பான சாதனைப் பதிவு செய்து, இவ்வாறு சீனா சென்றுள்ளார்.
இவ்வகைச் சாதனையை பாராட்டும் வகையில், தெரிவான மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் கௌரவிப்பு விழா கடந்த 2025 ஜூன் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சின் இசுருபாயவில் மண்டபத்தில் இடம்பெற்றது.
சாதனை..
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் கௌரவ அதிதிகளாக கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன, கல்வி அமைச்சின் செயலாளர் நாயக கலுவேவ ஆகியோர் பங்கேற்று மாணவர்களை ஊக்குவித்தனர்.
மேலும், கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள், தேசிய, மாகாண மற்றும் வலயமட்ட விஞ்ஞான பாடத்துறை அதிகாரிகள் என பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த சாதனை பள்ளியின் பண்பாட்டு உயர்வுக்கும், முழு கல்முனை வலயத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது என பாடசாலை அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

