படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 24வது நினைவேந்தல்

Batticaloa Anura Kumara Dissanayaka Eastern Province
By Laksi Oct 19, 2024 10:38 AM GMT
Laksi

Laksi

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி அருகில் இன்று (19) நடைபெற்றுள்ளது.

இதன்போது மயில்வாகனம் நிமலராஜனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து மௌன இறைவணக்கம் இடம்பெற்றது.

நாட்டில் கைதான வெளிநாட்டு இணைய குற்றவாளிகள் தொடர்பில் தீவிர விசாரணைகள்

நாட்டில் கைதான வெளிநாட்டு இணைய குற்றவாளிகள் தொடர்பில் தீவிர விசாரணைகள்

படுகொலை சம்பந்தமாக விசாரணைகள்

புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற படுகொலை சம்பந்தமாக விசாரணைகள் நடத்தப்படவுள்ளமையை வரவேற்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 24வது நினைவேந்தல் | 24Th Commemoration Of Journalist M Nimalarajan

இந்த நினைவஞ்சலி நிகழ்வில் மாவட்டத்தின் ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

புதிய விசேட வர்த்தக பண்ட வரி தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

புதிய விசேட வர்த்தக பண்ட வரி தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW