அம்பாறையில் வீடொன்றில் புதையல் தோண்டிய இருவர் கைது

Ampara Sri Lanka Police Investigation Crime
By Laksi Aug 29, 2024 01:01 PM GMT
Laksi

Laksi

அம்பாறை- கரங்கம பிரதேசத்தில் அனுமதியின்றி வீடொன்றினுள் புதையல் தோண்டிய இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் குணசிறியின் பணிப்புரையின் கீழ், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் மேற்பார்வையில் அதிகாரிகள் குழுவொன்று அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரங்கம பகுதியில் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, வீடொன்றில் அகழ்வாராய்ச்சி மூலம் சுமார் 35 அடி ஆழத்தில் புதையல் தோண்டிய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் திடீர் சுற்றிவளைப்பு: பல வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல்

மட்டக்களப்பில் திடீர் சுற்றிவளைப்பு: பல வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல்

மேலதிக விசாரணை

சம்பவத்தில் அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த 43 மற்றும் 47 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறையில் வீடொன்றில் புதையல் தோண்டிய இருவர் கைது | 2 Persons Arrested For Digging Treasure In Ampara

இதனையடுத்து, தண்ணீர் மோட்டார், ஹில்டி 1, கம்பி வடம் உள்ளிட்ட தோண்டும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும், சந்தேக நபர்கள் , புதையல் தோண்ட பயன்படுத்திய உபகரணங்கள் என்பன மேலதிக விசாரணைக்காக அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் தொழிற்கல்வி கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள்

மட்டக்களப்பில் தொழிற்கல்வி கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள்

இலங்கையில் குழந்தைகளுக்கான சவர்க்காரத்தில் மோசடி: பெற்றோருக்கு எச்சரிக்கை

இலங்கையில் குழந்தைகளுக்கான சவர்க்காரத்தில் மோசடி: பெற்றோருக்கு எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW