கொலம்பியாவில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல்: சிறுவர்கள் உட்பட பலர் பலி

Crime Colombia World
By Laksi Jul 26, 2024 12:31 PM GMT
Laksi

Laksi

கொலம்பியா (Colombia) - ஆர்ஜெலியா நகரிலுள்ள கால்பந்து மைதானம் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொலம்பியாவில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயற்பட்டு வருகின்ற நிலையில் அப்பாவி மக்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தி அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றனர்.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

டிரோன் தாக்குதல்

இந்தநிலையில், ஆர்ஜெலியா நகரிலுள்ள கால்பந்து மைதானத்தில் மேற்கொள்ளப்பட்ட  டிரோன் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் சிலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொலம்பியாவில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல்: சிறுவர்கள் உட்பட பலர் பலி | 10 Children Killed In Drone Attack In Colombia

அத்தோடு, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தாக்குதலுக்கு புரட்சிகர ஆயுதப்படை அமைப்பு பொறுப்பேற்றுள்ளதுடன் இது குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சமர்:இருவர் பலி

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சமர்:இருவர் பலி

பிலிப்பைன்சில் கன மழையில் சிக்கி பலர் பலி

பிலிப்பைன்சில் கன மழையில் சிக்கி பலர் பலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW