பிலிப்பைன்சில் கன மழையில் சிக்கி பலர் பலி

Climate Change Philippines Weather World
By Laksi Jul 25, 2024 11:31 AM GMT

பிலிப்பைன்சில் (Philippines) கனமழையால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் சீனக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது.

இந்தநிலையில், 'கெமி' என பெயரிடப்பட்டுள்ள புயல், கிழக்கிலிருந்து தைவான் நோக்கி நகர்ந்து தற்போது பிலிப்பைன்ஸ் அருகே கடலில் மையம் கொண்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்: வயிற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்: வயிற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை

மீட்கும் பணி

இதைத் தொடர்ந்து பிலிப்பைன்சின் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்த கனமழையால் முக்கிய நகரங்கள் அழிந்துள்ளன.

பிலிப்பைன்சில் கன மழையில் சிக்கி பலர் பலி | Heavy Rains Kill 13 In Philippines

இந்தநிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையில் இருந்த 6 லட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை படகுகள் மூலம் மீட்கும் பணியில் அந்நாட்டு பேரிடர் மீட்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய இராணுவ அதிகாரியை குறி வைத்து வெடிகுண்டு தாக்குதல்!

ரஷ்ய இராணுவ அதிகாரியை குறி வைத்து வெடிகுண்டு தாக்குதல்!

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானம் : பலர் உயிரிழப்பு

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானம் : பலர் உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW