யுக்திய நடவடிக்கையின் போது 702 பேர் கைது

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Mayuri Sep 01, 2024 05:16 AM GMT
Mayuri

Mayuri

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 702 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 692 ஆண்களும் 10 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 11 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்

போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 3 பேரை புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யுக்திய நடவடிக்கையின் போது 702 பேர் கைது | Yukthiya Operation Sri Lanka

சந்தேகநபர்களிடமிருந்து 182.96 கிராம் ஹெரோயின், 312.658 கிராம் ஐஸ், 991.638 கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW